கோவையில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000-ம் ரூபாய் நோட்டுகள் சிக்கியது

கோவையில் ரூ.1.30 கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தற்போது சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இருந்து கோவை வந்த கார் ஒன்றை சரவணம்பட்டி சோதனைச் சாவடியில் நேற்று இரவு போலீசார் சோதனைக்காக நிறுத்தினர். அப்போது காரில் இருந்த ஜோஸ் என்ற வாலிபர் உட்பட ஒருவர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000-ம் ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்துச்சென்ற போலீசார் தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...