ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் மூலம் 9,54,426 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறுவார்கள் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பிசப் உபகாரம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கி பேசினார்.



அப்போது அவர் பேசுகையில், கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக, நிதிநிலை அறிக்கையில், 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 



தமிழகத்தில் சுமார் 1 கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக செயல்படும் 34,840 நியாய விலைக் கடைகள் மூலமாகவும், அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 1250 நியாயவிலைக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 54 நியாயவிலைக் கடைகள், மகளிர் சுயஉதவிக்குழு நடத்தும் 108 நியாயவிலைக் கடைகள் மூலம் என மொத்தம் 1412 கடைகளில் 9,54,426 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறும் வகையில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி துவக்கப்பட்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு, செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்படும். தகவல் பெறப்பட்ட பின்னர், ரேசன் கடைகளுக்கு நேரில் சென்று, மின்னணு குடும்ப அட்டைகளை அனைவரும் பெற்றுக் கொள்ளலாம் என எஸ்.பி.வேலுமணி பேசினார்.



இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி,  கோவை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தலைவர் கருப்பசாமி, அர்ச்சுன கூட்டுறவு சங்கத்தலைவர் டி.எ.பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...