நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரத்தில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

செய்தியாளர் நேச பிரபுவின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாராபுரம் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் சார்பில் அண்ணா சிலை முன்பு காவல்துறையினரை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தியாளர் நேச பிரபுவின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும். கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பலில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும்.



அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் தாராபுரம், குண்டடம், மூலனூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் பத்திரிக்கை செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...