ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள நொய்யலை மீட்க பொதுமக்கள் கோரிக்கை


கோவை, திருப்பூர் மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்குவது, நொய்யல் ஆறு. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, சின்னாறு, பெரியாறு என பல கிளை ஆறுகளும், சிற்றாறுகளும் கூடுதுறையில் சங்கமமாகி, நொய்யல் உருவெடுக்கிறது.



இதே நதியில், 32 காட்டாற்று ஓடைகள் கலக்கின்றன. கோவையைச் சுற்றியுள்ள, 19 குளங்களை நிறைத்த பின், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில், 160 கிலோ மீட்டர் பயணித்து, நொய்யல் என்ற கிராமத்தில், காவிரியில் கலக்கிறது.

ஒரு காலத்தில், கொங்கு மண்டலத்தில் உயிர்களுக்கும், பயிர்களுக்கும் ரத்தநாளமாய் விளங்கிய நொய்யல், கடந்த கால் நுாற்றாண்டு காலத்தில், ஆக்கிரமிப்புகளாலும், ஆலைக்கழிவுகளாலும் இருந்த தடமே மறைந்துபோய் கொண்டிருக்கிறது.



நொய்யலின் வழித்தடத்தை மறித்தும், குளங்களை மூடியும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், நொய்யலின் மறைவிற்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்த விஷயத்தில், அரசுத்துறைகளே முன்னோடியாக விளங்கி, சாலை, பணிமனை என ஏராளமான கட்டமைப்புகளை குளத்தில் அமைத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, குளங்களை பல்லாயிரக்கணக்கானோர் ஆக்கிரமித்து, வீடுகளைக் கட்டியுள்ளனர்.

இவற்றில், வாலாங்குளத்தில் இருந்த சில நூறு வீடுகள் மட்டும் அகற்றப்பட்டு, அங்கிருந்த குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் தரப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு குளங்கள், ஆற்றுப்பாதைகள், வாய்க்கால் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இதனிடையே, ஆப்துப்பாலம் அருகே கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நொய்யல் நதியில் மீண்டும் அத்துமீறி  ஆக்கிரமிப்புபணி நடைபெற்று வருகிறது.

சில அரசியல்வாதிகளின் பெயர்களை கூறியே இவ்வாறான தவறுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் கடிதம் அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

உடனடியாக கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு ஆக்கிரமிப்பில் இருந்து நொய்யலை மீட்கவேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...