சாலை விதிகளை கடைபிடித்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என சாலை பாதுகாப்பு கருத்தரங்கில் ஆட்சியர் பேச்சு

கோவை பிஆர்எஸ் மைதானம் காவலர் பயிற்சி பள்ளி கூட்டரங்கில் இன்று சாலைபாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நிழச்சி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் முன்னிலை வகித்தார். 



இந்நிகழ்ச்சியில் சாலைபாதுகாப்பு கையேட்டினை மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கி பேசுகையில், சாலை பாதுகாப்புப் பணியில் மேம்படுத்துவது சம்மந்தமாக மாநில அரசால் விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வாகனப் பெருக்கம் அதிகரிப்பதை போன்று விபத்துகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

விபத்து என்பது யாரும் விரும்பி செய்யப்படுவதில்லை. இருப்பினும் மனித தவறுகள் காரணமாகவே 90 சதவிகிதம் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளால் பொருட்சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி விலை மதிப்பற்ற உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது.

பெரும்பாலான விபத்துகள் மனித தவறுகளால் ஏற்படுவதால் மனித தவறுகளை குறைக்கும் விதமாகவே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் சிறப்பாக கொண்டாடப்பட்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மேலும், சாலை பாதுகாப்பு சம்மந்தமாக அனைத்து துறைகளிலும் விபத்துக்களை குறைக்கவும், உயிரிழப்புகளை குறைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கோவை மாவட்டத்தில் காவல்துறையின் மூலம் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து பராமரிக்கும் விதமாக ஹோண்டா நிறுவனம் ஒருங்கிணைக்கப்பட்டு அதனமூலம் பணியாளர் நியமனம் செய்து ஒவ்வொரு நாளும், பள்ளி குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதனை மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களும், தெரிந்து கொண்டு சாலை விதிகளை தெரிந்து கொள்வதுடன் தங்கள் வீட்டிலுள்ள பெற்றோர்கள் மற்றும் சகோதரர்களுக்கு இதன் அவசியம் குறித்து அறிவுறுத்த வேண்டும். 

இதே போல் சிறியவர் முதல் பெரியவர் வரை சாலை விதிகளை கடைபிடித்து செல்வோமேயானால் முற்றிலும் விபத்தை தவிர்த்திடலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசினார்.

முன்னதாக பிஆர்எஸ் வளாகத்தில் உள்ள சாலை பாதுகாப்பு விதிகளை பள்ளி குழந்தைகள் பின்பற்றும் பொருட்டு சிறுவர் போக்குவரத்து பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு பள்ளி குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டனர். 

இந்நிகழ்ச்சயில், மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ரம்யாபாரதி, துணை ஆணையர் போக்குவரத்து சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முனுசாமி, உதயகுமார், கார்த்திகேயன், மணி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...