கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏசி மிஷினில் கேஸ் வெளியேறியதால் பரபரப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற கோவை சரவணம்பட்டியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஏசி மிஷினில் திடீரென சத்தத்துடன் கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.



கோவை: கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்விற்கு ஆளுநர் வருகை புரிந்தவுடன், தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.



அப்போது தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் இருந்த ஏசி மிஷினில் இருந்து திடீரென சப்தத்துடன் கேஸ் வெளியேறியுள்ளது.

இதனால் அங்கிருந்த மாணவர்கள் பதற்றத்திற்குள்ளான நிலையில் உடனடியாக ஏசி மிஷின் நிறுத்தப்பட்டு அங்கிருந்த மாணவர்கள் வேறு இடத்தில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இச்சம்பவத்தால் அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...