நீலகிரியில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி தொடக்கம் - 3 கட்டங்களா நடைபெற்ற பயிற்சி

நீலகிரியில் கடந்த 30ஆம் தேதி தேசிய படை மாணவிகளுக்கான மலையேற்ற பயிற்சி தொடங்கிய நிலையில், 3 கட்ட மலையேற்ற பயிற்சிக்கு பின் பழங்குடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது.



பயிற்சியின் முதல் கட்டமாக4 கிலோமீட்டர் தொலைவிலான அவா மலை முதல் சிம்ஸ்பூங்கா வரையில் மலையேற்ற பயிற்சி வழங்கப்பட்டது.

இரண்டாம் நிலை பயிற்சியாக 8 கிலோமீட்டர் தொலைவு என்ற அடிப்படையில் சேலாஸில் இருந்து பக்காசுரன் மலை, உபதலையிலிருந்து கேந்தரை கிராமம் வழியாக பழத்தோட்டம் வந்தடையும் வகையிலான பயிற்சி வழங்கப்பட்டது.



இதனை தொடர்ந்து மூன்றாம் கட்டமாக முத்தொரை பாலாடாவிலிருந்து முத்துனாடு மந்து வரையிலான மலையேற்ற பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இறுதியாக தேசிய படை மாணவிகள் பழங்குடி கிராமம் மற்றும் பழங்குடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். மேலும் பழங்குடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி, வாழ்வியல் மதிப்பீடுகள் குறித்துவிழிப்புணர்வு வழங்கப்பட்டது.



இந்த பயிற்சியின் மூலம் பன்முக கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்ததாக பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகள் தெரிவித்தனர்.



Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...