உடுமலை வாழை விவசாயிகளுக்கு தோட்டக் கலைத்துறை அழைப்பு

வாழை சாகுபடியில் பலத்த காற்றினால் ஏற்படும் இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இழப்பைத் தாங்கும் வகையில், இழப்பீடு பெற வாழைக்கு காப்பீடு செய்ய வாருங்கள் என்று உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.


திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டாரத்தில் வாழை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இயற்கை சீற்றங்கள், சாதகமற்ற வானிலை உள்ளிட்ட காரணங்களால் பயிர் பாதிப்பு ஏற்படும் சூழலில் காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது.

குறிப்பாக வாழை சாகுபடியில் பலத்த காற்றினால் ஏற்படும் இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இழப்பைத் தாங்கும் வகையில், இழப்பீடு பெற வாழைக்கு காப்பீடு செய்ய வாருங்கள் என்று உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வாழைக்கு காப்பீடு செய்ய, வருகிற 28-ந் தேதி கடைசி நாளாகும். எனவே ஏக்கருக்கு ரூ.4 ஆயிரத்து 875 பிரீமியம் செலுத்தி ரூ.97 ஆயிரத்து 510 வரை இழப்பீடு பெறலாம் என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter