கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா..!!

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் துறை வாரியாக உயர் மதிப்பெண் பெற்று நமது கல்லூரியினை தேர்வு செய்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


கோவை: முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழாவில் கல்லூரியின் அனைத்து டீன்களையும், துறை தலைவர்களையும் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்லூரியின் முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.



ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே. ஜேனட் அவர்கள் நிகழ்ச்சியின் துவக்கமாக முதலாம் ஆண்டு மாணவர்களையும், அவர்தம் பெற்றோர்களையும் வரவேற்று கல்லூரியின் சிறப்புகள் மற்றும் சாதனைகள் குறித்து உரையை வழங்கினார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, அறங்காவலர் கே.ஆதித்யா தலைமை வகித்தனர், மற்றும் கல்லூரியின் தலைமை செயல் அலுவலர் முனைவர் கே. சுந்தரராமன் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்று மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு வெற்றிகரமான பொறியியல் வல்லுநராக திகழ மாணவர்கள் தங்களின் படிப்பில் முழு ஈடுபாட்டுடன் முழு கவனத்தையும் செலுத்தி கற்றுக் கொள்ள வேண்டும் என ஊக்கப்படுத்தினார்.

மேலும், நல்ல ஒழுக்க நெறிகளை பின்பற்றி பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் தமது கல்லூரி வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக் கொள்ளுதல் வேண்டும் எனவும் தமது வாழ்த்துறையில் தெரிவித்துக் கொண்டார். கல்லூரியின் சிறப்பம்சங்களை மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.

மாற்றம் ஃபவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர், இன்போசிஸ் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு துணைத் தலைவருமான சுஜித் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.



அவர் தனது உரையில் மாணவர்கள் வகுப்பறை பாடத்தை தாண்டி அவர்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்ளும் வண்ணம் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கல்லூரியில் நடக்கும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். தங்களுடைய துறை சார்ந்த நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பம் சார்ந்த சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும். பொறியியல் படிக்கும் மாணவர்கள் தங்கள் தோற்றத்தை செழுமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

ஒரு வெளிநாட்டு மொழியினை கற்றுக்கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை அண்டவிடாமல் மாணவர்கள் தங்களை நெறிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தலைமை விருந்தினர் உரையை தொடர்ந்து கல்லூரியின் கல்வி கையேடு வெளியிடப்பட்டது. கல்லூரியின் அனைத்து டீன்களையும், துறை தலைவர்களையும் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்லூரியின் முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். ஒவ்வொரு துறையிலும் உயர் மதிப்பெண் பெற்று நமது கல்லூரியினை தேர்வு செய்த மாணவர்கள் விழா மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.



ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களைச் சார்ந்த கல்லூரிகளின் முதல்வர்கள், டீன்கள், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...