கோவை ஸ்ரீ ‌ராமகிருஷ்ணா மகளிர்‌ கல்லூரியில்‌ கைத்தறி தின விழா - கைத்தறி உடையணிந்து மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்‌!

நெசவுத்தொழிலுக்கு ஆதரவளிக்கும்‌ வகையில்‌ கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர்‌ கலை அறிவியல்‌ கல்லூரி மாணவிகள்‌, பேராசிரியர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ அனைவரும்‌ கைத்தறி ஆடையணிந்து உலக கைத்தறி தினத்தைக்‌ கொண்டாடினர்‌.


கோவை: உலக கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட அனைவரும் கைத்தறி உடையணிந்து உற்சாகமாக கொண்டாடினர்‌.

நெசவுத்தொழிலுக்கு ஆதரவளிக்கும்‌ வகையில்‌ கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர்‌ கலை அறிவியல்‌ கல்லூரி மாணவிகள்‌, பேராசிரியர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ அனைவரும்‌ கைத்தறி ஆடையணிந்து உலக கைத்தறி தினத்தைக்‌ கொண்டாடினர்‌.

கைத்தறி ஆடைகளை அணிவது நம்‌ உடலுக்கு நன்மையளிக்க‌ கூடியது. தற்போது அழிந்து வரும்‌ தொழில்களில்‌ ஒன்றாக மாறி வரும்‌ நெசவுத் தொழிலுக்கும்,‌ நெசவாளர்களுக்கும்‌ ஆதரவு தரும்‌ வகையில்‌ கல்லாரி மாணவிகள்‌ வண்ணமயமான கைத்தறி ஆடைகளில்‌ வலம் வந்தனர்‌.



கைத்தறிக்கு முக்கியத்துவம்‌ தந்த நம்‌ தேசத்தந்தை மகாத்மா காந்தியின்‌ கைராட்டை வடிவில்‌ மாணவிகள்‌ நின்றது காண்போரைக்‌ கவர்ந்தது.

சமூக அக்கறையோடு மாணவிகள்‌ எடுத்த இந்த முயற்சியைப்‌ பொதுமக்கள்‌ பெரிதும்‌ பாராட்டினர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...