உடுமலை அருகே அரசு பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு!

பூலாங்கிணறு அரசு மேல்நிலை பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளை சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கைவினை பொருட்களை செய்வது குறித்த பயிற்சிகளும் வழங்கினர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கைவினை பொருட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திட்ட அலுவலர் செ சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.

இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் எம் சண்முகவேல் சாலை பாதுகாப்பும் விழிப்புணர்வும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். சாலை பாதுகாப்பு தொடர்பான குறும்படங்கள் திரையிடப்பட்டது.



மேலும், அறிவியல் மற்றும் கைவினை பொருட்கள் தொடர்பான போட்டிகள் நடைபெற்றது. தமிழ் ஆசிரியை ரேணுகா மற்றும் அறிவியல் ஆசிரியர் சுரேஷ் குமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பள்ளி வகுப்பறைகளில் அப்துல் கலாமின் சாதனைகள் குறித்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன. கைவினை பயிற்சியை தொடர்ந்து தாங்கள் தயாரித்த கைவினை பொருட்களை மாணவ மாணவிகள் ஆசிரியர்களிடம் காட்டி பாராட்டுகளை பெற்றனர்.

சுகாதார மன்ற ஒருங்கிணைப்பாளர் தேவிகா, மாணவிகளின் சுத்தமும் சுகாதாரமும் என்னும் தலைப்பில் உரையாற்றினார். அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான செயல்பாடுகள் செய்தனர்.



மேலும் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...