கோவை கங்கா செவிலியர் கல்லூரியில் கலை மற்றும் கலாச்சார போட்டிகள் - மாணவ, மாணவிகள் உற்சாகம்!

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரியில் தேசிய செவிலியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 30 ஆவது ஆண்டு மண்டல அளவிலான டாஸ்னாகாம் கலை மற்றும் கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



கோவை: கோவை கங்கா செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற கலை மற்றும் கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவை வட்டமலைபாளையத்தில் இயங்கி வரும் கங்கா செவிலியர் கல்லூரியில் தேசிய செவிலியர் சங்கத்தின் சார்பில் 30 ஆவது ஆண்டு மண்டல அளவிலான டாஸ்னாகாம் கலை மற்றும் கலாச்சார போட்டிகள் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை கங்கா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜா சபாபதி கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் பேண்ட் வாத்திய அணிவகுப்பு அளிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில், நல்லிணக்கத்தின் அடையாளமாக புறாக்கள் உயரமாக பறக்க விடப்பட்டன. 5வது மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்தர் ஜான் தலைமையில், பங்கேற்ற அனைத்து கல்லூரி துணைத் தலைவர்கள், நிபுணருக்கு மிகுந்த மரியாதையுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கங்கா செவிலியர் கல்லூரியின் அறங்காவலர் ரமா ராஜசேகரன் அனைவரையும் வரவேற்றார்.



கங்கா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கங்கா மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜே ஜி சண்முகநாதன் தலைமை வகித்தார். தேசிய செவிலியர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை ஐந்தாவது மண்டல பொறுப்பாளர்கள் டாக்டர் ஜெயசுதா மற்றும் தேசிய துணை தலைவர் டாக்டர் ஜெயினி கெம்ப் மாநாட்டின் கருப்பொருளான செவிலிய மாணவர்களின் மேம்பாட்டின் சவால்கள் தொகுப்பு பற்றி விளக்கினர்.

தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் ஆணி கிரேஸ் கலைமதி வழிகாட்டுதல் பெயரில் தமிழ்நாடு செவிலிய மாணவர் கழகத்தின் டாஸ்னாகாம் 30 ஆவது ஆண்டு மண்டல போட்டிகளை ஐந்தாவது மண்டலத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்தர் ஜான் ஏற்று நடத்தினார்.



இப்போட்டிகளில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 செவிலியர் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட சுமார் 1200 செவிலிய மாணவ, மாணவிகள் சிகை அலங்காரம், காய்கறி செதுக்குதல், கோலமிடுதல், பேச்சு, நடனம் மற்றும் கட்டுரைப் போட்டி என 16 வெவ்வேறு தனி மற்றும் குழுப் போட்டிகளை கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மாலையில் நடந்த நிகழ்ச்சி நிறைவு விழாவில் கங்கா செவிலியர் கல்லூரியின் மாணவர் தலைவர் வரவேற்புரை ஆற்ற கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்தர் ஜான் இந்நிகழ்ச்சியின் அறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் கம்பெனி இயக்குனர் கவிதாசன் மருத்துவ அவசர காலங்களில் செவிலியர்களின் தொண்டு இன்றியமையாதது குறித்து பேசினார்.

தேசிய செவிலியர் சங்கத்தின் ஐந்தாவது மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயசுதா மண்டல அறிக்கையை வெளியிட்டார். ஒன்றிணைக்கப்பட்ட நடுவர்களின் மதிப்பீட்டின்படி ஒவ்வொரு போட்டிகளில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நடுவர்களின் தீர்ப்பின் படி சிறந்த கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டு சூப்பர் நோவா கோப்பை வழங்கப்பட்டது.



இக்கால சவால் மிக்க செவிலிய துறையின் பண்புடன் பணியாற்ற தேவையான திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கான போட்டிகள், நிகழ்ச்சிகள் கல்லூரியில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த போட்டியாளர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...