உடுமலையில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்கம் - வருவாய் கோட்டாச்சியர் பங்கேற்பு!

உடுமலை அருகே பொள்ளாச்சி சாலையில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வரும் இன்று முதல் மே 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான தொடக்க விழாவில், வருவாய் கோட்டாச்சியர் ஜஸ்வந்த் கண்ணன் பங்கேற்று பயிற்சிகளை தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நீட் தேர்வு மற்றும் ராணுவ பணியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று துவக்கப்பட்டுள்ளது.



உடுமலை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கத்தில் நீட் தேர்வு மற்றும் ராணுவ பணியில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்க விழா இன்று நடைபெற்றது.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உடுமலை அரசு மருத்துவமனை டாக்டர் ஜோதிமணி, உடுமலை ரோட்டரி சங்க தலைவர் சத்தியம் பாபு, உடுமலை கட்டுநர் வல்லுனர் சங்க தலைவர் ரவி ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு, இந்த பயிற்சி குறித்து பேசினர்.

தொடர்ந்து, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், தான் படிக்கும் காலங்களில் போட்டி தேர்வுக்கு தயாரானது எப்படி என்பது குறித்து விளக்கி பேசினார். நிறைவாக லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



ஏழை, மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் இந்த நீட் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் நூலகம் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தவிர பள்ளி மாணவர்களின் ஆளுமை திறனை வளர்க்கும் வகையில் ஞாயிறு தோறும் இலவச ஓவியம், சிலம்பம், பேச்சுப்போட்டி, யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.



இந்நிலையில், ஏப்ரல் 4 ம் தேதி முதல் மே 5 ம் தேதி வரை நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் லெப்டினெண்ட்‌ சுபாஷ் ரேணுகாதேவி பயிற்சி மையத்தை 9385930637 மற்றும் 6383328840 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...