நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, உடனடியாக அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை: கடந்த சில தினங்களாக கோவை மருதமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மாயமானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். மேலும், மாயமான நாய்களை சிறுத்தை இழுத்துச் சென்றதா? என்ற பயத்தில் மக்கள் இருந்து வந்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர்.
இந்த சூழலில், கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வளாகத்தில் சிறுத்தை ஒன்று உலா வரும் காட்சிகள் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. கோவிலில் தங்கத்தேர் நிறுத்துமிடம் மற்றும் ராஜகோபுரத்தின் முன்பகுதி வாயிலுக்கு அருகே உள்ள பகுதியில் நடந்து செல்லும் சிறுத்தையின் காட்சிகள் பதிவாகியுள்ளது.
நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, உடனடியாக அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.