திமுக ஆட்சியில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து விட்டு, தற்போது கச்சத்தீவை மீட்போம் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது நகைச்சுவையாக உள்ளது என எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சி தாலுக்கா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஜமாபந்தியில் வடக்கு உள் வட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுகம் ஞானதேவ் ராவ் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு சார் ஆட்சியருடன் இணைந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, கச்சத்தீவை மீட்டுத் தருவதாக தற்போது உள்ள திமுக அரசு சொல்வது நகைச்சுவையாக உள்ளது. முந்தைய திமுக மற்றும் காங்கிரஸ் அரசு ஒன்றிணைந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது அனைவருக்கும் தெரியும், தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில், உள்ள திமுக அரசு கச்சத்தீவை மீட்பது குறித்து பேசுவது அரசியல் நாடகம் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீரை கொண்டு சென்று, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தும் திட்டத்தால், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும்அதை நம்பியுள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே, இந்த திட்டத்தைச் செயல்படுத்த இந்த பகுதி மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு சார் ஆட்சியருடன் இணைந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, கச்சத்தீவை மீட்டுத் தருவதாக தற்போது உள்ள திமுக அரசு சொல்வது நகைச்சுவையாக உள்ளது. முந்தைய திமுக மற்றும் காங்கிரஸ் அரசு ஒன்றிணைந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது அனைவருக்கும் தெரியும், தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில், உள்ள திமுக அரசு கச்சத்தீவை மீட்பது குறித்து பேசுவது அரசியல் நாடகம் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீரை கொண்டு சென்று, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தும் திட்டத்தால், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும்அதை நம்பியுள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே, இந்த திட்டத்தைச் செயல்படுத்த இந்த பகுதி மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.