முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.2.79 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி!

கோவையில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் 2.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் தற்பொழுது படையில் பணி புரிவோர் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த படைவீரர் தற்பொழுது படையில் பணி புரிவோர் மற்றும் படை வீரர் குடும்பத்தினர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு, பட்டா மாறுதல், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 25 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.



அதனைத் தொடர்ந்து முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் ஆறு குழந்தைகளின் உயர் கல்விக்காக 1.85 லட்சம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், புற்றுநோய் நிவாரண நிதியாக ஒருவருக்கு 14000 ரூபாய், தொகுப்பு நிதி கருணை தொகையாக ஒருவருக்கு 30 ஆயிரம் நிதி உதவி, ராணுவ பயிற்சி தொகுப்பு மானியத் தொகையாக ஒருவருக்கு 50 ஆயிரம் நிதி உதவி என ஒன்பது நபர்களுக்கு 2.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...