வீட்டில் இருந்த அறைகள் மற்றும் அவரது செல்போனை சோதனை செய்து பார்த்ததில், பல்வேறு நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பெண்களின் புகைப்படம் அனுப்பி விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.
கோவை: பொள்ளாச்சியில், ஆன்லைன் வாயிலாக புகைப்படம் அனுப்பிவிபசார தொழில் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டி ஆஞ்சநேயர் கோவில் பின்புறம்தனியாக இருக்கும் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக தாலுக்கா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு இருந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஆழியாறு பகுதியை சேர்ந்த செல்லபாண்டியன்(38) என்பது தெரியவந்தது.
பின்னர், வீட்டில் இருந்த அறைகள் மற்றும் அவரது செல்போனை சோதனை செய்து பார்த்ததில், அதில் பல்வேறு நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பெண்களின் புகைப்படம் அனுப்பி விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், வீட்டில் இருந்த அறையில் ஒரு பெண் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, செல்ல பாண்டியனை கைது செய்த தாலுகா போலீசார், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணை மீட்டு கோவை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட செல்ல பாண்டியன் ஏற்கனவே விபசார வழக்கில் பொள்ளாச்சி கிழக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டி ஆஞ்சநேயர் கோவில் பின்புறம்தனியாக இருக்கும் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக தாலுக்கா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு இருந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஆழியாறு பகுதியை சேர்ந்த செல்லபாண்டியன்(38) என்பது தெரியவந்தது.
பின்னர், வீட்டில் இருந்த அறைகள் மற்றும் அவரது செல்போனை சோதனை செய்து பார்த்ததில், அதில் பல்வேறு நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பெண்களின் புகைப்படம் அனுப்பி விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், வீட்டில் இருந்த அறையில் ஒரு பெண் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, செல்ல பாண்டியனை கைது செய்த தாலுகா போலீசார், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணை மீட்டு கோவை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட செல்ல பாண்டியன் ஏற்கனவே விபசார வழக்கில் பொள்ளாச்சி கிழக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.