கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த 3-விமானங்கள் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கோவை: கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த 3-விமானங்கள் மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கேரளா மலை ஓர மாவட்டங்களான வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலைகேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையம் 6-வது ஓடு தளத்தில் தரையிறக்கப்பட்டது.
அதே நேரத்தில் அபுதாபியில் இருந்து வந்த விமானமும் கோவை விமான நிலையம் 4-வது ஓடு தளத்தில்தரையிறக்கப்பட்டது.பின்னர் காலை 7-மணியளவில் கோழிக்கோடு வந்த சார்ஜா விமானமும் கோவை விமான நிலையத்தில் உள்ள 9-வது ஓடு தளத்தில் தரையிறக்கப்பட்டது.
நீண்ட நேரத்திற்குப் பின் சீரான வானிலை மாற்றம் ஏற்பட்ட பிறகு மீண்டும், கோவையிலிருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு 3-விமானங்களும் புறப்பட்டுச் சென்றது.
கேரளா மலை ஓர மாவட்டங்களான வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலைகேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையம் 6-வது ஓடு தளத்தில் தரையிறக்கப்பட்டது.
அதே நேரத்தில் அபுதாபியில் இருந்து வந்த விமானமும் கோவை விமான நிலையம் 4-வது ஓடு தளத்தில்தரையிறக்கப்பட்டது.பின்னர் காலை 7-மணியளவில் கோழிக்கோடு வந்த சார்ஜா விமானமும் கோவை விமான நிலையத்தில் உள்ள 9-வது ஓடு தளத்தில் தரையிறக்கப்பட்டது.
நீண்ட நேரத்திற்குப் பின் சீரான வானிலை மாற்றம் ஏற்பட்ட பிறகு மீண்டும், கோவையிலிருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு 3-விமானங்களும் புறப்பட்டுச் சென்றது.