வாலாங்குளத்தில் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழு (2021-2022) தலைவர் டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் க.அன்பழகன், உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி உக்கடம் வாலாங் குளக்கரைகளில் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வாலாங்குளத்தில் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சீர்மிகு நகரத் திட்டப்பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழு (2021-2022) தலைவர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் க.அன்பழகன், திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன், ட்டி.இராமச்சந்திரன், சி.வி.எம்.பி.எழிலரசன், ஈ.பாலசுப்ரமணியம், எஸ்.ராஜ்குமார், அம்மன்.கே.அர்ச்சுணன், டாக்டர்.தி.சதன் திருமலைக்குமார், ப.சிவக்குமார் (௭) தாயகம் கவி, அக்ரி S.S.கிருஷ்ணமூர்த்தி, ஜெ.முகம்மது ஷாநவாஸ், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் பா.சுப்பிரமணியம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மதிப்பிற்குரிய துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷா்மிளா, பொதுசுகாதாரக் குழுத்தலைவர் பெ.மாரிச்செல்வள், நகரமைப்புக் குழுத்தலைவர் சோமு(௭)சந்தோஷ், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் வி.பி.முபசீரா, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.