தமிழ்நாட்டில் எதிர் வரக்கூடிய 2022-ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள மாதத்திற்கான மழை பற்றிய முன்னறிவிப்பு நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோவை: எதிர்வரக்கூடிய 2022-ம் ஆண்டின் தென்மேற்குப் பருவமழைக் காலத்திற்கான (ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக மாச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் (Rainman International V.4.3 Software) என்னும் கணிணி கட்டமைப்பைக் கொண்டு 2022-ம் ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60 சதவிகித வாய்ப்பிற்கான எதிர்பாரக்கபபடும் மழையளவு கீழே தரப்பட்டுள்ளது.
வடகிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் சராசரி மழையளவு விட அதிகமாக மழை எதிர்பார்க்கபபடுகிறது. பிற மாவட்டங்களில் சராசரி மழையளவு எதிர்பார்க்கபபடுகிறது.


இதற்காக மாச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் (Rainman International V.4.3 Software) என்னும் கணிணி கட்டமைப்பைக் கொண்டு 2022-ம் ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60 சதவிகித வாய்ப்பிற்கான எதிர்பாரக்கபபடும் மழையளவு கீழே தரப்பட்டுள்ளது.
வடகிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் சராசரி மழையளவு விட அதிகமாக மழை எதிர்பார்க்கபபடுகிறது. பிற மாவட்டங்களில் சராசரி மழையளவு எதிர்பார்க்கபபடுகிறது.