தமிழ் பாரம்பரிய கலையான வளரி கலை குறித்த நடுவர்களுக்கான தேசிய அளவிலான பயிற்சி முகாம் இந்திய வளரி விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக கோவையில் நடைபெற்றது.
கோவை: கோவையில் தமிழ் பாரம்பரிய கலையான வளரி கலை குறித்த நடுவர்களுக்கானதேசிய அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழர்கள் போரில் எதிரிகளை வீழ்த்த சிலம்பம், வாள் சண்டை, வளரி உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயன்படுத்தினர். தற்போது வளரி உள்ளிட்ட போர்க்கலைகள் அழிந்து வருகின்றன.
இந்நிலையில் வளரி கலையை விளையாட்டாக ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் வளரி கலை விளையாட்டாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விளையாட்டில் நடுவர்களாக செயல்படுவதற்கான பயிற்சி முகாம் கோவை கணபதி கிருஷ்ண கவுடர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்திய வளரி விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இதில், குஜராத், பீகார், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, என பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் திருச்சி, கோவை, மதுரை, தஞ்சை என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வளரி கலை விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய வளரி விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் முகம்மது சிராஜ் அன்சாரி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில், கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தியாகு நாகராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் கலை நண்மணி நீலமேகம், தொழில்நுட்ப இயக்குனர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி முகாமில், வளரி விளையாட்டு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், மற்றும் அது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், பாரம்பரிய தமிழர் கலையான வளரியை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டு, அவற்றை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்து, தமிழர்களின் பழமையான கலைகளை இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாக இது போன்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி, ஜுவன் சிரில் மற்றும் பயிற்சியாளர் சிவமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழர்கள் போரில் எதிரிகளை வீழ்த்த சிலம்பம், வாள் சண்டை, வளரி உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயன்படுத்தினர். தற்போது வளரி உள்ளிட்ட போர்க்கலைகள் அழிந்து வருகின்றன.
இந்நிலையில் வளரி கலையை விளையாட்டாக ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் வளரி கலை விளையாட்டாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விளையாட்டில் நடுவர்களாக செயல்படுவதற்கான பயிற்சி முகாம் கோவை கணபதி கிருஷ்ண கவுடர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்திய வளரி விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இதில், குஜராத், பீகார், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, என பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் திருச்சி, கோவை, மதுரை, தஞ்சை என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வளரி கலை விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய வளரி விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் முகம்மது சிராஜ் அன்சாரி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில், கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தியாகு நாகராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் கலை நண்மணி நீலமேகம், தொழில்நுட்ப இயக்குனர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி முகாமில், வளரி விளையாட்டு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், மற்றும் அது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், பாரம்பரிய தமிழர் கலையான வளரியை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டு, அவற்றை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்து, தமிழர்களின் பழமையான கலைகளை இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாக இது போன்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி, ஜுவன் சிரில் மற்றும் பயிற்சியாளர் சிவமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.