கோவையில் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி பிரமாண்ட 'ராஜா நேரடி இசை' நிகழ்ச்சி ..!

ஜூன் 2 மாலை 6.30 மணி முதல் கொடிசியா வர்த்தக கண்காட்சி மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு விவரங்களுக்கு 88838-61616 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


கோவை: கோவையில் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி ராஜா நேரடி இசை நிகழ்ச்சி ஜூன் 2ஆம் தேதி கொடிசியாவில் நடைபெறுகிறது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2 ஆம் தேதி, இளையராஜா மற்றும் அவரது இசைக்குழுவினரின் கச்சேரி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த இசைக்கச்சேரியின் அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நிகழ்ச்சியின் லோகோ போஸ்டர் மற்றும் புரோமோ அறிமுகம் செய்யப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக்கான அறிமுகம் விழாவில் கிருஷ்ணா கல்வி குழுமங்களின் அறங்காவலர் ஶ்ரீமதி. மலர்விழி குத்துவிளக்கு ஏற்றி டிக்கெட் அறிமுகம் செய்து வைத்தார்.

கோவையில் ஜூன் 2-ம் தேதிஇசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி ராஜா லைவ்கான்செர்ட் என்றநேரடி இசை கச்சேரி நடைபெறுகிறது. இளையராஜா அவர்களின்80-வது பிறந்த நாளில் கோவையில் ரசிகர்களுக்கு நேரடி இசை நிகழ்ச்சி மூலம் இசை விருந்து வைக்கிறார் "தென்றல் வந்து தீண்டும் போது' மற்றும் "தென்பாண்டி சீமையிலே' போன்ற மெல்லிசைகள் பல மெலோடி பாடல்கள் இங்கு ஒலிக்க உள்ளது.

ஒன்பது மொழிகளில் சுமார் 1,500 படங்களில் இடம்பெற்ற 8,500 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான அறிமுகம் விழாவில் கிருஷ்ணா கல்வி குழுமங்களின் அறங்காவலர் ஶ்ரீமதி. மலர்விழிகுத்துவிளக்கு ஏற்றி டிக்கெட் அறிமுகம் செய்து வைத்தார்.



நிகழ்ச்சி குறித்து ரசிகர்களுக்கு இசைஞானி இளையராஜா கூறுகையில்,

‛‛எனது பிறந்தநாளில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பும் பாடல்களை கேட்டு மகிழ வாருங்கள்'' என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,

மெர்குரி, ஶ்ரீ ஆர்ட்ஸ் மற்றும் அருண் ஈவென்ட்ஸ் இணைந்து இந்த நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்கின்றன. சக்தி மசாலாவுடன்ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள்மற்றும் கரூர் வைசாவங்கியுடன் இணைந்துவழங்குகிறது. இந்த கச்சேரி ஆனதுஇசைஞானி இளையராஜாவுடன் தமிழ் சினிமாவில்பலமுன்னணி பாடகர் பங்குபெற உள்ளனர் . ஐந்து தசாப்தங்களாக அவர் தனது வாழ்க்கையில் 20,000 க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார்.



இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவுடன் தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி பாடகர்கள் மனோ, கார்த்திக், எஸ் பி பி சரண், யுகேந்திரன் வாசுதேவன், விபாவாரி, ஸ்வேதா மோகன், அனிதா, பிரியா ஹிமேஷ், சுர்முகி ஆகியோர் கலந்து கொண்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பாட உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் 35,000 முதல் 40,000 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பின்னணி பாடகர்கள் பாட உள்ளதாக தெரிவித்தனர். அதே போல் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இளையராஜாவின் தீவிர ரசிகர்களாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அனுமதி வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.



டிக்கெட்டுகளின் விலை ரூ.1000 முதல் ரூ.1,00,000/- வரை இருக்கும். இந்த நிகழ்ச்சியில் சிவகுமார் ஶ்ரீ ஆர்ட்ஸ், ஶ்ரீமதி. மலர்விழி, அறங்காவலர் கிருஷ்ணா கல்லூரி, அருண், அருண் ஈவென்ட்ஸ், செந்தில் கிரீன் & கிரீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வு தேதி:

ஜூன் 2 மாலை 6.30 மணி முதல் கொடிசியா வர்த்தக கண்காட்சி மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு விவரங்களுக்கு 88838-61616 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். PAYTM ஆப் மூலம் டிக்கெட்களை பெறலாம்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...