கோவையில் விஷ பாம்பு கடித்து பள்ளி சிறுவன் பலி – விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு வந்த போது ஏற்பட்ட சோகம்…!

கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவையில் விஷப் பாம்பு கடித்து பள்ளி சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல்முத்து. இவரது மகன் மணிவேல் (12) கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், கோவை துடியலூர், டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன் வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டின் மொட்டை மாடியில் சிறுவன் பந்து வீசி விளையாடிக் கொண்டிருந்தாக தெரிகிறது. அப்போது பந்து மாடியில் இருந்து வீட்டின் அருகே உள்ள புதருக்கு விழுந்துள்ளது.

இதையடுத்து சிறுவன் மணிவேல் அந்த பந்தை எடுப்பதற்காக கீழே இறங்கி புதருக்கு சென்றுள்ளார். அப்போது பந்தை எடுத்த போது அங்கிருந்த விஷப்பாம்பு, சிறுவனின் கையில் கடித்துள்ளது.

இதையடுத்து சிறுவன் தனது வீட்டில் கூறியதையடுத்து, உடனடியாகவீட்டில் இருந்தவர்கள் மணிவேலை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நேரம் ஆக, ஆக விஷம் ஏறியதால் அவர் ஆபத்தான கட்டத்திற்கு சென்றுள்ளார். இதனால் அவர் அதிதீவிர அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிறுவன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...