கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கோவையில் விஷப் பாம்பு கடித்து பள்ளி சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல்முத்து. இவரது மகன் மணிவேல் (12) கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், கோவை துடியலூர், டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன் வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டின் மொட்டை மாடியில் சிறுவன் பந்து வீசி விளையாடிக் கொண்டிருந்தாக தெரிகிறது. அப்போது பந்து மாடியில் இருந்து வீட்டின் அருகே உள்ள புதருக்கு விழுந்துள்ளது.
இதையடுத்து சிறுவன் மணிவேல் அந்த பந்தை எடுப்பதற்காக கீழே இறங்கி புதருக்கு சென்றுள்ளார். அப்போது பந்தை எடுத்த போது அங்கிருந்த விஷப்பாம்பு, சிறுவனின் கையில் கடித்துள்ளது.
இதையடுத்து சிறுவன் தனது வீட்டில் கூறியதையடுத்து, உடனடியாகவீட்டில் இருந்தவர்கள் மணிவேலை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நேரம் ஆக, ஆக விஷம் ஏறியதால் அவர் ஆபத்தான கட்டத்திற்கு சென்றுள்ளார். இதனால் அவர் அதிதீவிர அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிறுவன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல்முத்து. இவரது மகன் மணிவேல் (12) கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், கோவை துடியலூர், டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன் வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டின் மொட்டை மாடியில் சிறுவன் பந்து வீசி விளையாடிக் கொண்டிருந்தாக தெரிகிறது. அப்போது பந்து மாடியில் இருந்து வீட்டின் அருகே உள்ள புதருக்கு விழுந்துள்ளது.
இதையடுத்து சிறுவன் மணிவேல் அந்த பந்தை எடுப்பதற்காக கீழே இறங்கி புதருக்கு சென்றுள்ளார். அப்போது பந்தை எடுத்த போது அங்கிருந்த விஷப்பாம்பு, சிறுவனின் கையில் கடித்துள்ளது.
இதையடுத்து சிறுவன் தனது வீட்டில் கூறியதையடுத்து, உடனடியாகவீட்டில் இருந்தவர்கள் மணிவேலை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நேரம் ஆக, ஆக விஷம் ஏறியதால் அவர் ஆபத்தான கட்டத்திற்கு சென்றுள்ளார். இதனால் அவர் அதிதீவிர அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிறுவன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.