திருப்பூரில் 21-ஆயிரத்து, 39-பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வு பணிகளை கண்காணிக்க, வருவாய் ஆய்வாளர் நிலையில், சூப்பர்வைசராக, 120-பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 2 மற்றும் 2 'ஏ' போட்டித் தேர்வு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 21 ஆயிரத்து, 39 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.57 பள்ளி, கல்லூரிகளில், 69 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு பணிகளை கண்காணிக்க, துணைஆட்சியர் நிலை அதிகாரிகள் அடங்கிய, 11 'மொபைல் டீம்' உருவாக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் அடங்கிய, 10 பறக்கும் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
தேர்வு பணிகளை கண்காணிக்க, 72 வீடியோ கேமராமேன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு பணிகளை கண்காணிக்க, வருவாய் ஆய்வாளர் நிலையில், சூப்பர்வைசராக, 120 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போட்டித் தேர்வு நடக்கும் போது, வட்டங்கள் வாரியாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குரூப்-2 தேர்வுக்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் தாலுகாவில் மட்டும் மையங்களில் அமைக்கப்பட்டிருந்தது.
திருப்பூர் மாநகரில் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8:30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதனால் தேர்வர்கள் காலை 7:30மணி முதலே உற்சாகமாகத் தேர்வு மையங்களுக்கு வந்தனர். இதன் பின்னர் தேர்வர்களின் அடையாள அட்டைகளை தேர்வு கண்காணிப்பாளர்கள் பரிசோதித்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.
பெண்கள் பலர் தங்களது குழந்தைகளுடன் தேர்வு மையங்களுக்கு வந்திருந்த நிலையில், அவர்களது உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் குழந்தைகளைக் கொத்து விட்டு தேர்வு எழுதச் சென்றனர்.
இதனால் தேர்வர்களின் உறவினர்கள் என பலரும் தேர்வு மையங்களுக்கு வெளியே காத்திருந்தனர். இதுபோல் தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.