விசாரணையில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி சென்று கேரளாவில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1500-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் எஸ்.ஐக்கள் ஞானசேகரன், பாரத நேரு மற்றும் போலீசார் ஆனைமலை ரவுண்டானா அருகே நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தபோது 50-கிலோ எடை கொண்ட 30-மூட்டைகளில் 1500-கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர் ரித்தீஷ் வாகனத்தில் வந்த சஞ்சித், சச்சின் உள்ளிட்ட 4-பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்று கேரளாவில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி மற்றும் வாகனத்தை பதிவு செய்த போலீசார் 4-பேரையும் கைது செய்தனர்.
பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் எஸ்.ஐக்கள் ஞானசேகரன், பாரத நேரு மற்றும் போலீசார் ஆனைமலை ரவுண்டானா அருகே நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தபோது 50-கிலோ எடை கொண்ட 30-மூட்டைகளில் 1500-கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர் ரித்தீஷ் வாகனத்தில் வந்த சஞ்சித், சச்சின் உள்ளிட்ட 4-பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்று கேரளாவில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி மற்றும் வாகனத்தை பதிவு செய்த போலீசார் 4-பேரையும் கைது செய்தனர்.