கோவை வார்டு 26: மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரியின் ஆலோசனையின்படி தூய்மைப் பணி சிறப்பாக நடந்தது!

கோவை மாநகராட்சி வார்டு 26 க்கு உட்பட்ட பகுதியில் மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரியின் ஆலோசனையின் பேரில் சாக்கடை தூர்வாரும் பணியும், சாலையோரம் சுத்தம் செய்யும் பணியும் சிறப்பாக நடந்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி வார்டு 26 தூய்மைப் பணியாளர் அலுவலகத்தில் இன்று காலை மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.



இதில், கடந்த இரண்டு நாட்களாக வார்டுக்கு உட்பட்ட அவிநாசி ரோடு பகுதியில் புல், செடி கொடிகள் வெட்டி சாலையோரம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.



ஆதலால் தெருக்களுக்குள் பணியாளர்கள் செல்லவில்லை. ஆகவே இன்று வீடுகளில் குப்பை வாங்க பணிகளும், சாக்கடைகள் அள்ளும் பணிகள் துரிதமாக நடத்தித் தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது வார்டு எண் 26 பி கே டி நகர் பகுதியில் சாக்கடை இல்லாத பகுதியில் அப்பகுதி மக்கள் சாக்கடை வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை உடனடியாக கோவை மாநகராட்சி மேயர், கோவை மாநகராட்சி ஆணையர், வடக்கு மண்டல தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி உறுதியளித்தார்.



மாமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டதன் பேரில் வடக்கு மண்டல உதவி ஆணையர் மோகனசுந்தரி கருப்பண்ண கவுண்டர் லே-அவுட் பார்க் சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்தையும், நேரு நகர் 1, 2, 3 பட்டாளம்மன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் சாக்கடை சுத்தம் செய்ய வேண்டிய பணியின் அவசியத்தையும் எடுத்துச் சொல்லி அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.



இதையடுத்து, இன்று காலை ஸ்ரீ ராம் நகர் பகுதியில் சாக்கடை தூர்வாரும் பணியும், சிறு செடி கொடிகள் வெட்டும் பணியும் நடைபெற்றது. அப்போது, பயனீர் தியாகு, உதயகுமார் மேற்பார்வையாளர் சிவசாமி ஆகியோர் உடனிருந்தனர்.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...