கோவை மாநகராட்சி வார்டு 26 க்கு உட்பட்ட பகுதியில் மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரியின் ஆலோசனையின் பேரில் சாக்கடை தூர்வாரும் பணியும், சாலையோரம் சுத்தம் செய்யும் பணியும் சிறப்பாக நடந்துள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி வார்டு 26 தூய்மைப் பணியாளர் அலுவலகத்தில் இன்று காலை மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில், கடந்த இரண்டு நாட்களாக வார்டுக்கு உட்பட்ட அவிநாசி ரோடு பகுதியில் புல், செடி கொடிகள் வெட்டி சாலையோரம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

ஆதலால் தெருக்களுக்குள் பணியாளர்கள் செல்லவில்லை. ஆகவே இன்று வீடுகளில் குப்பை வாங்க பணிகளும், சாக்கடைகள் அள்ளும் பணிகள் துரிதமாக நடத்தித் தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது வார்டு எண் 26 பி கே டி நகர் பகுதியில் சாக்கடை இல்லாத பகுதியில் அப்பகுதி மக்கள் சாக்கடை வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை உடனடியாக கோவை மாநகராட்சி மேயர், கோவை மாநகராட்சி ஆணையர், வடக்கு மண்டல தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி உறுதியளித்தார்.

மாமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டதன் பேரில் வடக்கு மண்டல உதவி ஆணையர் மோகனசுந்தரி கருப்பண்ண கவுண்டர் லே-அவுட் பார்க் சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்தையும், நேரு நகர் 1, 2, 3 பட்டாளம்மன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் சாக்கடை சுத்தம் செய்ய வேண்டிய பணியின் அவசியத்தையும் எடுத்துச் சொல்லி அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதையடுத்து, இன்று காலை ஸ்ரீ ராம் நகர் பகுதியில் சாக்கடை தூர்வாரும் பணியும், சிறு செடி கொடிகள் வெட்டும் பணியும் நடைபெற்றது. அப்போது, பயனீர் தியாகு, உதயகுமார் மேற்பார்வையாளர் சிவசாமி ஆகியோர் உடனிருந்தனர்.



இதில், கடந்த இரண்டு நாட்களாக வார்டுக்கு உட்பட்ட அவிநாசி ரோடு பகுதியில் புல், செடி கொடிகள் வெட்டி சாலையோரம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
ஆதலால் தெருக்களுக்குள் பணியாளர்கள் செல்லவில்லை. ஆகவே இன்று வீடுகளில் குப்பை வாங்க பணிகளும், சாக்கடைகள் அள்ளும் பணிகள் துரிதமாக நடத்தித் தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது வார்டு எண் 26 பி கே டி நகர் பகுதியில் சாக்கடை இல்லாத பகுதியில் அப்பகுதி மக்கள் சாக்கடை வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை உடனடியாக கோவை மாநகராட்சி மேயர், கோவை மாநகராட்சி ஆணையர், வடக்கு மண்டல தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி உறுதியளித்தார்.
மாமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டதன் பேரில் வடக்கு மண்டல உதவி ஆணையர் மோகனசுந்தரி கருப்பண்ண கவுண்டர் லே-அவுட் பார்க் சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்தையும், நேரு நகர் 1, 2, 3 பட்டாளம்மன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் சாக்கடை சுத்தம் செய்ய வேண்டிய பணியின் அவசியத்தையும் எடுத்துச் சொல்லி அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையடுத்து, இன்று காலை ஸ்ரீ ராம் நகர் பகுதியில் சாக்கடை தூர்வாரும் பணியும், சிறு செடி கொடிகள் வெட்டும் பணியும் நடைபெற்றது. அப்போது, பயனீர் தியாகு, உதயகுமார் மேற்பார்வையாளர் சிவசாமி ஆகியோர் உடனிருந்தனர்.