சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டல அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் சொத்து வரி உயர்வுக்குஆட்சேபணை தெரிவிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது.

தமிழக அரசு சமீபத்தில் 25-சதவீதம் முதல் 150-சதவீதம் வரை சொத்து வரி உயர்வை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக் கூடிய நிலையில், சொத்து வரி உயர்வால் சாமானிய மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உடனடியாக தமிழக அரசு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது.

தமிழக அரசு சமீபத்தில் 25-சதவீதம் முதல் 150-சதவீதம் வரை சொத்து வரி உயர்வை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக் கூடிய நிலையில், சொத்து வரி உயர்வால் சாமானிய மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உடனடியாக தமிழக அரசு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது.