திருப்பூரில் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் 5-பவுன் நகை, 2-லட்சம் ரொக்கம் கொள்ளை..!

பல்லடம் அருகே ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டின் ஜன்னலை உடைத்து 5-பவுன் நகை, 2-லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டின் ஜன்னலை உடைத்து 5-பவுன் நகை, 2-லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம்சின்னையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். செட்டிபாளையம் சாலையில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரது வீட்டில் கீழே இரண்டு அறைகளும், மேலே இரண்டு அறைகளும் உள்ளன. எப்பொழுதும் இரவு உணவு முடித்துவிட்டு குடும்பத்தினர் அனைவரும் உறங்குவதற்காக மேலே சென்று விடுவார்கள்.

நேற்று இரவு வழக்கம் போல இரவு உணவு முடித்துவிட்டு உறங்குவதற்காக மேலே சென்று விட்டனர். கீழ் அறையில் உள்ள பீரோக்களின் சாவியை எப்பொழுதும் பீரோவிலேயே வைத்திருப்பார்கள்.

இந்நிலையில் நள்ளிரவு பூஜை அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த சாவியை கொண்டு பீரோவைத் திறந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, வீட்டின் முன்புற கதவிலிருந்த சாவியை கொண்டு கதவை திறந்து முன்புற கதவு வழியாக வெளியே சென்றுள்ளனர்.



அதிகாலை கீழே இறங்கி வந்து பார்த்த முருகேசன் வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளில் அலாரம் பொருத்தியுள்ள முருகேசன் அதற்குண்டான வேலைகளை முழுமையாக முடிக்காததால் இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...