திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் பல்லடம் சட்டப்பணிகள் குழு சார்பாக நடந்த புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில், கல்லூரி மாணவ மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலைக்கல்லூரியில், பல்லடம் சட்டப்பணிகள் குழு சார்பாக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை பல்லடம் நீதித்துறை நடுவர் சித்ரா துவக்கி வைத்தார்.

இதில், கலந்து கொண்ட மாணவ மாணவிகள் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் துவங்கிய இந்த பேரணி, மங்கலம் சாலை, என்.ஜி.ஆர் ரோடு வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

இந்த பேரணியில் பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.
இந்த பேரணியை பல்லடம் நீதித்துறை நடுவர் சித்ரா துவக்கி வைத்தார்.
இதில், கலந்து கொண்ட மாணவ மாணவிகள் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் துவங்கிய இந்த பேரணி, மங்கலம் சாலை, என்.ஜி.ஆர் ரோடு வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
இந்த பேரணியில் பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.