மீன்களுக்கு தூளாக்கப்பட்ட ஐஸ் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், மீன் இறைச்சி வெட்ட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் துருப்பிடிக்காத நல்ல நிலையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் கடை உரிமையாளர்களுக்கு வழங்கினர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம்சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் இருந்த மீன் விற்பனை கடைகள் மற்றும் பொரித்த மீன் விற்கும் 7-கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், பல்லடம் மற்றும் பொங்கலூர் பகுதியில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு மீன் கடையில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து 40-ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 175-கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தும் கிருமிநாசினி ஊற்றி அளிக்கப்பட்டது.

மேலும், இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தரம் சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. மீன் விற்பனை செய்யும் கடைகளில் மீன் இறைச்சியை சரியான வெப்பநிலை காட்டும் குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்த வேண்டும், குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்படும் மீன்களுக்கு தூளாக்கப்பட்ட ஐஸ் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், மீன் இறைச்சி வெட்ட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் துருப்பிடிக்காத நல்ல நிலையில் உள்ளதாக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழங்கினர்.

தகவல் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் இருந்த மீன் விற்பனை கடைகள் மற்றும் பொரித்த மீன் விற்கும் 7-கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், பல்லடம் மற்றும் பொங்கலூர் பகுதியில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு மீன் கடையில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து 40-ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 175-கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தும் கிருமிநாசினி ஊற்றி அளிக்கப்பட்டது.
மேலும், இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தரம் சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. மீன் விற்பனை செய்யும் கடைகளில் மீன் இறைச்சியை சரியான வெப்பநிலை காட்டும் குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்த வேண்டும், குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்படும் மீன்களுக்கு தூளாக்கப்பட்ட ஐஸ் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், மீன் இறைச்சி வெட்ட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் துருப்பிடிக்காத நல்ல நிலையில் உள்ளதாக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழங்கினர்.