'தக்காளி வைரஸ்' முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்..!

கோவையில் தக்காளி வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.



கோவை: கேரளாவில் குழந்தைகளிடம் தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து தமிழக - கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.



கேரள மாநிலத்தை ஒட்டி கோவை மாவட்டம் அமைந்துள்ளது. கேரளாவிலிருந்து நாள்தோறும் ஏராளமானோர் கோவைக்கு பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.

எனவே, கேரளாவில் இருந்து கோவை வருபவர்கள் மூலம் கோவையில் இந்த தக்காளி வைரஸ் பரவுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காகத் தமிழக-கேரள எல்லையான வாளையாறில் சோதனைச் சாவடி அமைத்து சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.



இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:-

இது நீரிழப்பு மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தும் வைரஸ் காய்ச்சல். பொதுவாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. அதிக நோய் தொற்று உள்ளது, ஆனால் தன்னை தானே இந்த வைரஸ் கட்டுப்படுத்துகிறது.

கேரளாவின் சில மாவட்டங்களில் இந்த வகை காய்ச்சல் பதிவாகியுள்ளன. வாளையாறுசோதனைச் சாவடியில் பணிபுரியும் உயர் அதிகாரிகளிடம் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...