கோவையில் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பில்லூர், ஆழியாரில் இருந்து தண்ணீர் பெறப்படும் என மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை மாவட்டத்தில் சிறுவாணி குடிநீர் வரத்து முழுமையாக நின்று விட்ட காரணத்தால், குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் விதமாக பில்லூர்-1 திட்டத்தின் மூலம் கூடுதலாக குறிச்சி பகுதிக்கு நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டரும், குனியமுத்தூர் பகுதிக்கு நாளொன்றுக்கு கூடுதலாக ஆழியார் குடிநீர் 20 லட்சம் லிட்டரும் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

"கோவை மாவட்டத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக 140 வருடங்களுக்கு முன்னர் பருவமழை இல்லாத காரணத்தினால் கோவை மாவட்டத்தில் இது போன்ற வறட்சி காணப்பட்டது. இருந்தாலும் கோவை மாநகராட்சி போர்கால அடிப்படையில் தேவையான குடிநீர் விநியோகம் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக ஆழியார் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது குறிச்சி பகுதிக்கு நாளொன்றுக்கு 51 லட்சம் லிட்டரும், குனியமுத்தூர் பகுதிக்கு நாளொன்றுக்கு 39 லட்சம் லிட்டரும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சிறுவாணி குடிநீர் விநியோகம் இல்லாத காரணத்தினால் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு குறிச்சி பகுதிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பில்லூர் குடிநீர், நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டருடன் கூடுதலாக நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

ஆழியார் நீராதாரத்திலிருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரிலிருந்து நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் குனியமுத்தூர் பகுதிக்கு வழங்க இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குறிச்சி மற்றும் மாச்சம்பாளையம் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு குறைவுபடாது. எதிர்காலத்தில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்படும்.

எனவே, குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து பொதுமக்களும் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...