நம் இந்திய திருநாட்டிலும் மற்றும் உலகெங்கிலும் போர் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், உலக மக்கள் போர் பயமின்றி நிம்மதியுடனும் ஒற்றுமையுடனும் வாழவும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை: கோவை மாநகர ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக பெருநாள் சிறப்பு தொழுகை, கோவை கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இன்று (12-08-2019) காலை 8.00 மணியளவில் நடைபெற்றது.
கரும்புக்கடை ஹிதாயா பெண்கள் கல்லூரியின் தாளாளரும், மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளியின் இமாமுமான, மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி சிறப்பு தொழுகையை வழிநடத்தினார். தொழுகைக்குப் பிறகு சிறப்புரை ஆற்றினார்.
அவர் தனது உரையில், பெருநாளை கொண்டாடும்ஒவ்வொருவரும் தங்கள் உற்றாருக்கும், ஏழைமக்களுக்கும்உதவிகள் செய்து, எல்லா மக்களும் உவகையோடு இந்த திருநாளை கொண்டாட ஆலோசனைகள் வழங்கினார்.மேலும் வரும் காலம் வசந்த காலமாக அமைய, இன்றைய நாட்களில் இளைஞர்கள் சமூகப்பணிகளில் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், நம் இந்தியத் திருநாட்டிலும் மற்றும் உலகெங்கிலும் போர் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், உலக மக்கள் போர் பயமின்றி நிம்மதியுடனும் ஒற்றுமையுடனும் வாழவும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
உலகில் எல்லா பகுதிகளிலும் நீதியும், நிலையான ஆட்சியும் அமையவும், மக்கள் சகோதரத்துவ உணர்வோடு வாழவும், இருகரம் ஏந்தி இறைவனிடம் மனமுருகிபிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது.
இந்த பெருநாள் தொழுகை நிகழ்வில்ஆண்கள் - பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் பன்னிரெண்டாயிரம் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.