மாநகராட்சி கட்டண கழிப்பிடங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்திலும் மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணங்கள் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிம இனங்களுக்கு மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். 

மேலும், மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்கள் அறிவிப்புப் பலகையில் நன்கு தெரியுமாறு வைக்கப்பட்டு, அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டுமே குத்தகைதாரர்கள் வசூல் செய்ய வேண்டும். 

மேலும், நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் குத்தகைதாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, குத்தகை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...