அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
கோவை: கோவையில் ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
கோவைஅடுத்தகணபதி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரின் மனைவி மகேஷ்வரி (28). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்றுவீட்டில் இருக்கும்பொழுது பனிக்குடம் உடைந்தது. இதனால் மிகுந்த வலியுடன் துடித்து வந்தார்.
இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காந்திபுரம் பகுதியில் இருந்துவிரைந்து சென்ற ஆம்புலன்ஸ் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்தது.
இதையடுத்து,ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் கோபாலகிருஷ்ணன் அவருடைய வீட்டிலேயே பைலட் சுரேஷ் உதவியுடன் பிரசவம் பார்த்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கணபதி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகத் தாய் சேய் இருவரையும் சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்இருவரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
கோவைஅடுத்தகணபதி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரின் மனைவி மகேஷ்வரி (28). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்றுவீட்டில் இருக்கும்பொழுது பனிக்குடம் உடைந்தது. இதனால் மிகுந்த வலியுடன் துடித்து வந்தார்.
இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காந்திபுரம் பகுதியில் இருந்துவிரைந்து சென்ற ஆம்புலன்ஸ் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்தது.
இதையடுத்து,ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் கோபாலகிருஷ்ணன் அவருடைய வீட்டிலேயே பைலட் சுரேஷ் உதவியுடன் பிரசவம் பார்த்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கணபதி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகத் தாய் சேய் இருவரையும் சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்இருவரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.