திருப்பூரில் கடுமையான தொழில் பாதிப்பு இருப்பதால் கடனை கட்ட முடியாதவர்களிடம் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்க கூடாது என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நூல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
நிறுவனத் தலைவர் இப்ராஹிம் பாதுசா எழுச்சியுரையாற்றினார். இதில் நூல் விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷம் எழுப்பப் பட்டது.

மேலும், திருப்பூரில் கடுமையான தொழில் பாதிப்பு இருப்பதால் கடனை கட்ட முடியாதவர்களிடம் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாகப் பணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் வேல்முருகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், இணை ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், கழக அமைப்பாளர் மணிமாறன், துணை அமைப்பாளர் சீனிவாசன், துணைத்தலைவர் நாகேந்திரன், ஆலோசகர் அபுதாகிர், மேற்கு மண்டலச் செயலாளர் பிரகாஷ், இளைஞரணி தலைவர் முகமது பாரூக், செயலாளர் ராஜ்குமார் உள்படத் திருப்பூர் மாவட்ட மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நூல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
நிறுவனத் தலைவர் இப்ராஹிம் பாதுசா எழுச்சியுரையாற்றினார். இதில் நூல் விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷம் எழுப்பப் பட்டது.
மேலும், திருப்பூரில் கடுமையான தொழில் பாதிப்பு இருப்பதால் கடனை கட்ட முடியாதவர்களிடம் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாகப் பணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் வேல்முருகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், இணை ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், கழக அமைப்பாளர் மணிமாறன், துணை அமைப்பாளர் சீனிவாசன், துணைத்தலைவர் நாகேந்திரன், ஆலோசகர் அபுதாகிர், மேற்கு மண்டலச் செயலாளர் பிரகாஷ், இளைஞரணி தலைவர் முகமது பாரூக், செயலாளர் ராஜ்குமார் உள்படத் திருப்பூர் மாவட்ட மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.