உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை: கோவையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு மண் வளம் காப்போம் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இன்று உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசு சார்பிலும் தனியார் அமைப்புகளாலும்பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் ஈஷா யோகா மையத்தின் மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வரையிலும், அதே போல் திருவள்ளுவர் பேருந்து நிலையம் வரையிலும், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் தனியார் அமைப்புகள் இணைந்து வரிசையாக நின்று "மண் காப்போம்" என்ற பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இன்று உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசு சார்பிலும் தனியார் அமைப்புகளாலும்பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் ஈஷா யோகா மையத்தின் மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வரையிலும், அதே போல் திருவள்ளுவர் பேருந்து நிலையம் வரையிலும், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் தனியார் அமைப்புகள் இணைந்து வரிசையாக நின்று "மண் காப்போம்" என்ற பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.