குப்பைகள் கொட்டியதில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையருக்கு 15 நாட்களில் விளக்கம் தர வேண்டும் என தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகளுக்கு இடையே சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வெள்ளலூர் ஹவுஸிங் யூனிட் பகுதியில் வசிக்கும் சிவகாமி என்பவர் கடந்த 6-ஆம் தேதி வரை குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அச்சமயத்தில் லாரியில் சிக்கி பலியானதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக குடும்பத்தினருக்கு நிவாரணம் கேட்டு மனு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிவகாமியின் குடுப்பத்தார் நிவாரணநிதி கோரி தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் மனு அளித்திருந்தனர்.
அந்த மனுவின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இருந்து கோவை மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையருக்கு 15-நாட்களில் விளக்கம் தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.