கோவை தடாகம் அருகே மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த விவகாரம் - தோட்ட உரிமையாளர் கைது..!

கடந்த இரண்டு மாதங்களாக தனிப்படை அமைத்து தேடி வந்தநிலையில், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தோட்ட உரிமையாளரை வனத்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை தடாகம் அருகே மின் வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்த விவகாரத்தில், தோட்ட உரிமையாளர் மனோகர் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை தடாகம் அருகே வனப்பகுதியிலிருந்து, கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியேறிய காட்டுயானைகள் அருகே உள்ள தனியார் தோட்டத்திற்கு வந்துள்ளது. அப்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள மின் வேலியில் சிக்கி சுமார் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, யானை மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது உறுதி செய்தனர். இதையடுத்து மின்துறை ஊழியர்கள் அங்கு வந்து சோதனை செய்தனர்.

அப்போது உயர் மின் அழுத்த மின்சாரம் செலுத்தியதே யானை உயிரிழப்புக்குக் காரணம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து, வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தோட்ட உரிமையாளர் மனோகரன் மற்றும் அவரது மகன் நரேஷ் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் மனோகரன் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் கடந்த இரண்டு மாதங்களாக வனத்துறையினர் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இதனிடையே மனோகரன் தனது வழக்கறிஞர் மூலம் கோவை நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் முன் ஜாமின் கேட்டு மனு அளித்தார்.

ஆனால் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் பதுங்கி இருந்த மனோகரன் இன்று காலை பேருந்து மூலம் கோவை வந்தார். அப்போது பன்னிமடை பேருந்து நிறுத்தம் அருகே வந்த அவரை கோவை வனச்சரகர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மகன் நரேஷை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...