தேவேந்திரகுல வேளாளர் சமூக கூட்டமைப்பு சார்பில் நடந்து முடிந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கோவை: சமீபத்தில் நடந்து முடிந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் கோவை மாநகராட்சி குனியமுத்தூர் பகுதியில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கு, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேவேந்திர குல வேளாளர்கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், குனியமுத்தூர் பகுதி மாமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து நினைவு பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், 92 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் துணை மேயரான, வெற்றி செல்வன், 87வது வார்டு உதயநிதி ப.பாபு, 88 வது வார்டு முருகேசன், 93 வது வார்டு இளஞ்சேகரன் ஆகியோர்பங்கேற்றனர்.
இந்த பாராட்டு விழாவில், தேவேந்திரகுல வேளாளர் சமூக கூட்டமைப்பு நிர்வாகிகள் பாலச்சந்திரன், குமார், மணிராஜ், ஜெகன், ராஜேஷ், இளங்கோவன் மற்றும் குனியமுத்தூர் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர் மன்றத்தினரும் கலந்து கொண்டனர்.

குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேவேந்திர குல வேளாளர்கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், குனியமுத்தூர் பகுதி மாமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து நினைவு பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், 92 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் துணை மேயரான, வெற்றி செல்வன், 87வது வார்டு உதயநிதி ப.பாபு, 88 வது வார்டு முருகேசன், 93 வது வார்டு இளஞ்சேகரன் ஆகியோர்பங்கேற்றனர்.
இந்த பாராட்டு விழாவில், தேவேந்திரகுல வேளாளர் சமூக கூட்டமைப்பு நிர்வாகிகள் பாலச்சந்திரன், குமார், மணிராஜ், ஜெகன், ராஜேஷ், இளங்கோவன் மற்றும் குனியமுத்தூர் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர் மன்றத்தினரும் கலந்து கொண்டனர்.