கோவை வால்பாறை அருகே எருமை மாடுமீது இருசக்கர வாகனம் மோதியதில் வாலிபர் படுகாயம்..!

வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், காதில் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்ததால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: வால்பாறை அருகேஎருமை மாட்டின் மீது மோதி இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வீட்டில் வளர்க்கும் எருமை மாடுகளை சுமார் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் வரும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் எருமை மாட்டின் மீது மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வால்பாறை பகுதியில் புதிய பேருந்து நிலையம் ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை வளர்த்து வருகின்றனர். மாடுகளை வீட்டில் பட்டியில் அடைத்து வைத்துவளர்க்காமல் சாலைகளிலும் தெருக்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் மேய்த்து வருகின்றனர்.



எருமை மாடுகளை வீட்டில் வளர்க்காமல் தேயிலைத் தோட்டங்களில் மேய்ச்சலுக்கு விட்டு விட்டுமாலை நேரத்தில்வீடுகளில் பால் கறந்து விட்டு மீண்டும் மாடுகளை பொது இடங்களில் விட்டு விடுகின்றனர். இதனால் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையுராகவும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் வால்பாறை தாய்முடி எஸ்டேட்டை சேர்ந்த பந்து விளையாட்டு வீரர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள்அருகிலுள்ள இஞ்சிபாறை எஸ்டேட் பகுதிக்குவிளையாடச் சென்றுவிட்டு இரவு நேரம் இருசக்கர வாகனத்தில்வீடு திரும்பி வரும்பொழுது ஸ்டேன்மோர் பகுதியில் சாலையின் குறுக்கே எருமை மாடுகள் வந்ததால்இருசக்கர வாகனம் எருமை மாட்டின் மீது மோதியதில் 4 பேர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவ்வழியாக வந்த தனியார் எஸ்டேட் மேலாளர்ஹரிஹரன் ராஜேஷ், விஜயகுமார், தேவபலன், ஆகிய 4 பேர்களையும் காப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் ஹரிஹரன் என்ற வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், காதில் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 108 மூலம் அழைத்துச் சென்றனர்.

மேலும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எருமை மாடுகளை வீட்டில் வளர்க்காமல் சாலைகளில் நடமாடுவதால் விபத்து ஏற்பட்டு வருவதாகவும், எருமை மாடுகளை வீட்டில் வளர்க்க நடவடிக்கையை எடுக்கவேண்டும்எனவும், பொது இடங்களில் சுற்றித் திரியாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...