'நீலகிரீஸ்' தங்க கோப்பை போட்டி, ஜூன் 2-ம் தேதி நடக்கிறது. மொத்தம், 5.35 கோடி ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. நுழைவு கட்டணமாக, 10 ரூபாய் வசூலிக்கப்படும்.
கோவை: ஊட்டி நீலகிரி மாவட்டத்தில், கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில், குதிரைப்பந்தயம் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு, 135-வது குதிரைப்பந்தயம், (நாளை) 14-ம் தேதி துவங்கி, ஜூன் 18-வரை நடக்கிறது.
இதில், 600-குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மெட்ராஸ் குதிரைப்பந்தய செயலாளர் நிர்மல் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊட்டியில் கொரோனா தொற்று காரணமாக, இரு ஆண்டுகளாகக் குதிரைப்பந்தயம் நடக்காத நிலையில், நடப்பாண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி போட்டிகள் நடத்தப்படும். ஒரு பெண் பயிற்சியாளர் உட்பட, 30-பயிற்சியாளர்கள் மற்றும் 30-ஜாக்கிகள் பங்கேற்கின்றனர்.
முக்கிய போட்டியான, 'நீலகிரீஸ்' தங்க கோப்பை போட்டி, ஜூன் 2-ம் தேதி நடக்கிறது. மொத்தம், 5.35 கோடி ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. நுழைவு கட்டணமாக, 10 ரூபாய் வசூலிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நடப்பாண்டு, 135-வது குதிரைப்பந்தயம், (நாளை) 14-ம் தேதி துவங்கி, ஜூன் 18-வரை நடக்கிறது.
இதில், 600-குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மெட்ராஸ் குதிரைப்பந்தய செயலாளர் நிர்மல் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊட்டியில் கொரோனா தொற்று காரணமாக, இரு ஆண்டுகளாகக் குதிரைப்பந்தயம் நடக்காத நிலையில், நடப்பாண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி போட்டிகள் நடத்தப்படும். ஒரு பெண் பயிற்சியாளர் உட்பட, 30-பயிற்சியாளர்கள் மற்றும் 30-ஜாக்கிகள் பங்கேற்கின்றனர்.
முக்கிய போட்டியான, 'நீலகிரீஸ்' தங்க கோப்பை போட்டி, ஜூன் 2-ம் தேதி நடக்கிறது. மொத்தம், 5.35 கோடி ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. நுழைவு கட்டணமாக, 10 ரூபாய் வசூலிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.