இதையடுத்து பொக்லின் மூலம் சாலையில் கவிழ்ந்த கார் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாகப் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
கோவை நஞ்சுண்டாபுரம் சந்தோஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் கெளசிக் (21) கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனியாக தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இவரது நண்பர்கள் பிரித்திவி,கனிஷ்கா, நிவேதா இவர்கள் 4 பேரும் இன்று காலை சுமார் 3 மணியளவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் முதல் காட்சியைபார்ப்பதற்காக, தங்களது காரில் வந்துள்ளனர்.
அப்போது கார் உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி, சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கெளசிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த மற்ற 3 பேரையும், அங்கு வந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கெளசிக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பொக்லின் மூலம் சாலையில் கவிழ்ந்த கார் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாகப் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.