கோவை கிணத்துக்கடவில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மீது மரங்கள் விழுந்து சேதம்..!

கிணத்துக்கடவில் நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் தேவராயபுரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மீது மரங்கள் விழுந்து சேதம். 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து பாதிப்பு.


கோவை: கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில் மாலை கருமேகங்கள் சூழ இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்தது.



இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது இதனிடையே பொள்ளாச்சி அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மீது தென்னை மரங்கள் விழுந்து மேற்கூரைகள் சேதமடைந்தது, மேலும் பலத்த காற்று வீசியதால் அடியோடு மேற்கூரை காற்றில் பறந்தது.

மேலும் தென்னை தோப்புகளிலிருந்த 50-க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தும் பாதியளவு முறிந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மின்கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகளும், மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளுக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...