மாநகராட்சி முதல் கவுன்சிலர்கள் கூட்டத்தில் புதிய கவுன்சிலர்களுக்கு அடுத்த கூட்டம் முதல் பேச வாய்ப்பு தரப்படும் என்று கோவை மேயர் உறுதியளித்தார்.
கோவை:கோவை மாநகராட்சியில் நேற்று முதல் கூட்டம் என்பதால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் பலரும் போட்டி போட்டு பேசினர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மன்றத்தின் முதல் சாதாரண கூட்டம், நேற்று மேயர் தலைமையில் நடந்தது.
கூட்டம் தொடங்கியதும் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, மத்திய மண்டல தலைவர் மீனா, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் ஆகியோர், கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
முதல் கூட்டம் என்பதால், பல கவுன்சிலர்களும் ஆர்வமாகப் பேச முற்பட்டனர். ஆனால், அவர்களுக்குப் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே பேசிய சிலரே, மீண்டும் மீண்டும் பேசுவதும் நடந்தது. வாய்ப்பு கிடைக்காதவர்கள் கொந்தளித்தனர்.
அவர்களை கமிஷனரும், மேயரும் சமாதானப்படுத்தினர். 'அடுத்த கூட்டம் முதல் அனைவருக்கும் பேச வாய்ப்பு தரப்படும்' என்று மேயர் கூறினார். 'கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக மனு கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் பேச அழைக்கிறோம்' என்றார் கமிஷனர்.
கூட்டத்தில், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, வரி விதிப்புக்குழு தலைவர் முபஷீரா, கல்விக்குழு தலைவர் மாலதி, கவுன்சிலர்கள் அப்துல் காதர், மல்லிகா, சர்மிளா சுரேஷ்நாராயணன், அங்குலட்சுமி உள்ளிட்ட பலரும் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மன்றத்தின் முதல் சாதாரண கூட்டம், நேற்று மேயர் தலைமையில் நடந்தது.
கூட்டம் தொடங்கியதும் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, மத்திய மண்டல தலைவர் மீனா, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் ஆகியோர், கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
முதல் கூட்டம் என்பதால், பல கவுன்சிலர்களும் ஆர்வமாகப் பேச முற்பட்டனர். ஆனால், அவர்களுக்குப் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே பேசிய சிலரே, மீண்டும் மீண்டும் பேசுவதும் நடந்தது. வாய்ப்பு கிடைக்காதவர்கள் கொந்தளித்தனர்.
அவர்களை கமிஷனரும், மேயரும் சமாதானப்படுத்தினர். 'அடுத்த கூட்டம் முதல் அனைவருக்கும் பேச வாய்ப்பு தரப்படும்' என்று மேயர் கூறினார். 'கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக மனு கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் பேச அழைக்கிறோம்' என்றார் கமிஷனர்.
கூட்டத்தில், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, வரி விதிப்புக்குழு தலைவர் முபஷீரா, கல்விக்குழு தலைவர் மாலதி, கவுன்சிலர்கள் அப்துல் காதர், மல்லிகா, சர்மிளா சுரேஷ்நாராயணன், அங்குலட்சுமி உள்ளிட்ட பலரும் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.