கோவையில் சொத்து வரி தீர்மான நகலை கிழித்தெறிந்த அதிமுக கவுன்சிலர் சஸ்பென்ட் - மேயர் அதிரடி உத்தரவு

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி தீர்மான நகலை கிழித்தெறிந்த 47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன், அடுத்து வரும் இரண்டு மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி தீர்மான நகலை கிழித்தெறிந்த 47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன், அடுத்து வரும் இரண்டு மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மூன்று அதிமுக உறுப்பினர்கள், சொத்து வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் எனவும் இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், என்று எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து, மாமன்ற வளாகத்தில் சொத்துவரி தீர்மான நகலை 47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன் கிழித்து எறிந்து கண்டனத்தை தெரிவித்தார். அவரது செயலுக்கு, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர், சொத்துவரி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்றத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், மாமன்ற கூட்டம் வளாகத்தில் சொத்துவரி தீர்மான நகலை கிழித்து ரகளையில் ஈடுபட்ட 47வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன் அடுத்த இரண்டு கூட்டங்களில் பங்கேற்க, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உத்திரவிட்டார்.

கோவை மாநகராட்சியின் முதல் சாதாரண கூட்டத்திலேயே சொத்துவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய அதிமுக உறுப்பினர் பிரபாகரன் இரு கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...