கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி தீர்மான நகலை கிழித்தெறிந்த 47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன், அடுத்து வரும் இரண்டு மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி தீர்மான நகலை கிழித்தெறிந்த 47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன், அடுத்து வரும் இரண்டு மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மூன்று அதிமுக உறுப்பினர்கள், சொத்து வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் எனவும் இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், என்று எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனையடுத்து, மாமன்ற வளாகத்தில் சொத்துவரி தீர்மான நகலை 47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன் கிழித்து எறிந்து கண்டனத்தை தெரிவித்தார். அவரது செயலுக்கு, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், சொத்துவரி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்றத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், மாமன்ற கூட்டம் வளாகத்தில் சொத்துவரி தீர்மான நகலை கிழித்து ரகளையில் ஈடுபட்ட 47வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன் அடுத்த இரண்டு கூட்டங்களில் பங்கேற்க, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உத்திரவிட்டார்.
கோவை மாநகராட்சியின் முதல் சாதாரண கூட்டத்திலேயே சொத்துவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய அதிமுக உறுப்பினர் பிரபாகரன் இரு கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மூன்று அதிமுக உறுப்பினர்கள், சொத்து வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் எனவும் இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், என்று எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனையடுத்து, மாமன்ற வளாகத்தில் சொத்துவரி தீர்மான நகலை 47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன் கிழித்து எறிந்து கண்டனத்தை தெரிவித்தார். அவரது செயலுக்கு, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், சொத்துவரி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்றத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், மாமன்ற கூட்டம் வளாகத்தில் சொத்துவரி தீர்மான நகலை கிழித்து ரகளையில் ஈடுபட்ட 47வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன் அடுத்த இரண்டு கூட்டங்களில் பங்கேற்க, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உத்திரவிட்டார்.
கோவை மாநகராட்சியின் முதல் சாதாரண கூட்டத்திலேயே சொத்துவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய அதிமுக உறுப்பினர் பிரபாகரன் இரு கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.