கோவையில் 'கீர்த்தி சக்ரா' விருது பெற்ற ராணுவ வீரருக்கு 29வது ஆண்டாக ராணுவ மரியாதையுடன் மலர் அஞ்சலி

1993 ஆம் ஆண்டு, ஆர்.டி.எஸ் வெடிமருந்துகளுடன் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 10-க்கும் மேற்பட்ட தீவிரவாத கும்பலை தடுத்து நிறுத்த முற்பட்ட போது, அதில் தீவிரவாதிகளை கண்ணாளன் கென்னடி சுட்டு வீழ்த்தி, வீர மரணம் அடைந்தார்.



கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணாளன் கென்னடி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கிடபெருமாள் - மங்குத்தாய் தம்பதியினரின் 4 வது மகனான இவர், 1984 ஆண்டு நம்பர் 25 மெட்ராஸ் ரெஜிமெண்ட் இராணுவத்தில் சேர்ந்து திருவனந்தபுரம் மற்றும் இலங்கை அமைதிப்படையில் பணியாற்றினார்.

தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் எல்லை பாதுகாப்பு படைப்பிரிவில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 1993 ஆம் ஆண்டு, ஆர்.டி.எஸ் வெடிமருந்துகளுடன் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 10-க்கும் மேற்பட்ட திவிரவாத கும்பலை தடுத்து நிறுத்த முற்பட்ட போது, அதில் தீவிரவாதிகளை கண்ணாளன் கென்னடி சுட்டு வீழ்த்தினார்.

இதில், மற்ற தீவிரவாதிகளால் சுடப்பட்டு, தலையில் குண்டு காயம் ஏற்பட்டு அங்கேயே வீரமரணமும் அடைந்தார். வீரமரணம் அடைந்த கண்ணாளன் கென்னடிக்கு அவரது வீரச்செயல்களைப் பாராட்டி இந்திய இராணுவத்தின் உயரிய விருதான "கீர்த்தி சக்ரா" விருது 1994ல் அப்போதைய ஜனாதிபதி டாக்டர். சங்கர்தயாள் சர்மா கென்னடியின் தாயாரிடம் வழங்கினார்.



கென்னடியின் நினைவாக நாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டு தோட்டத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு, அதில் அவரது படங்கள், உடைகள், இராணுவத்தால் வழங்கப்பட்ட கேடயங்கள் ஆகியன பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றை அப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு செல்வர்.



இந்த நிலையில், 29-வது ஆண்டு நினைவு நாளில் குன்னூர் வெலிங்டன் படைப்பிரிவுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் நாயக்கன்பாளையத்தில் உள்ள கண்ணாளன் கென்னடியின் நினைவு தினமான ஏப்ரல் 11ம் தேதி அவரது நினைவிடத்திற்கு வந்து இராணுவ மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

வரும் 23ம் தேதி மேகாலயாவில் ராணுவ அலுவலகத்தில் "கீர்த்தி சக்ரா" விருது பெற்ற கண்ணாளன் கென்னடியின் உருவசிலை திறக்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.



இந்நிலையில், இன்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் அவர் சகோதரர்கள் செல்வநம்பி, அண்ணாதுரை, குப்பு ஜெயம், பார்த்தசாரதி பிரபு, சகோதரி டாக்டர்.புவனேஷ்வரி, ராணுவ வீரர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பள்ளி மாணவ மாணவிகள், கென்னடி குடும்பத்தினர், நாயக்கன்பாளையம் ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், அஞ்சலி நிகழ்ச்சியானது ராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...