கோவை கிணத்துக்கடவில் இரும்பு கடையில் செல்போன் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேர் கைது..!

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றநிலையில் கைது செய்யப்பட்டனர்.



கோவை: கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் இரும்பு கடையில் செல்போன் திருட்டு வழக்கில் தேடப்பட்ட வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம், சேரன் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 36). இவர் அங்கு இரும்பு கடை நடத்தி வருகிறார்.

இவருடைய கடையில் கடந்த 4-ம் தேதி வந்த 3 பேர் செல்போனை திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கிணத்துக்கடவு போலீசார் பொள்ளாச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுவனைக் கைது செய்தனர். இதில் தலைமறைவாக 2 பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு கிணத்துக்கடவு பேருந்து நிலையம் பகுதியில்போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

உடனே போலீசார் அந்த 2 பேரையும் துரத்திச்சென்று பிடித்து விசாரணை செய்ததில் கார்த்தி (வயது 28), கவுதம் (19) என்பதும், காளிதாஸ் இரும்பு கடையிலிருந்து செல்போன் திருடிய வழக்கில் தப்பி ஓடியவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...