தமிழ்புத்தாண்டு, புனிதவெள்ளி தொடர் அரசு விடுமுறை - கோவையில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!

வரும் பண்டிகை நாட்களில் கூடுதல் கூட்டத்தை சமாளிக்க, ஏப்.13 காலை முதலே கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


கோவை: கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு தினமும் 220 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு அரசு விடுமுறை வருவதால், கோவையில் தங்கி வேலை செய்து வரும் தொழிலாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டபொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கபடவுள்ளது.

தற்போது, விடுமுறை, கோடைக்காலம் தொடங்கியதோடு பள்ளிகளிலும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டு விடுமுறையும் படிப்படியாக விடப்பட்டு வருகின்றன. இதனால் பஸ், ரயில் நிலையங்களில்கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டும், 15 புனித வெள்ளி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்காக அரசு விடுமுறை உள்ளது.

அதை தொடர்ந்து, அடுத்து இரு நாட்கள் சனி, மற்றும் ஞாயிறுக்கிழமை ஆகிய விடுமுறை தொடர்ந்து வருகிறது. அதே போல ஏப்.16 சித்ரா பவுர்ணமி என்பதால் அன்றைய தினம் பக்தர்கள் வெள்ளிங்கிரி, ஈஷா மேட்டுப்பாளையம் வனபத்திரகாளி அம்மன் கோவில்களுக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், பண்டிகை மற்றும் சிறப்பு தினங்கள் தொடர்ச்சியாக வருவதால் பொதுமக்களின் பயண தேவையை கருத்தில் கொண்டு, கோவையில் இருந்து கூடுதலாக 450 சிறப்பு பேருந்துகள்இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன.

தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி, சித்ரா பவுர்ணமியையொட்டி வரும்ஏப்.13 காலை முதலே சிறப்பு பேருந்துகள் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன என்று போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...