காற்றில் சாய்ந்த வாழைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை காரமடையில் சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையால் 20-ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம்,கெம்மாரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி மற்றும் வாழை விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
மேலும் ஒரு சில இடங்களில் வன விலங்குகளிடமிருந்து தங்கள் பயிர்களைக் காத்து விவசாயிகள் விவசாயம் செய்துகின்றனர். மேலும் கதளி ,நேந்திரன்,பூவன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகள் இப்பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம், கெம்மாரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பனப்பாளையம் புதூர்சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சூறாவளிக்காற்றுடன் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பனப்பாளையம் புதூர் பகுதியில் பயிரிட்டிருந்த சுமார் 20-ஆயிரம் வாழை குலை தள்ளிய நிலையில், அறுவடை நேரத்தில் முறிந்து நாசமானது.

காற்றில் சாய்ந்த வாழைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம்,கெம்மாரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி மற்றும் வாழை விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
மேலும் ஒரு சில இடங்களில் வன விலங்குகளிடமிருந்து தங்கள் பயிர்களைக் காத்து விவசாயிகள் விவசாயம் செய்துகின்றனர். மேலும் கதளி ,நேந்திரன்,பூவன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகள் இப்பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம், கெம்மாரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பனப்பாளையம் புதூர்சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சூறாவளிக்காற்றுடன் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பனப்பாளையம் புதூர் பகுதியில் பயிரிட்டிருந்த சுமார் 20-ஆயிரம் வாழை குலை தள்ளிய நிலையில், அறுவடை நேரத்தில் முறிந்து நாசமானது.
காற்றில் சாய்ந்த வாழைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.